சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள பொலிஸார்!

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வவுனியா – குருமன்காடு பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.

தப்பித்து சென்ற நபர் தொடர்பில் தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 071-8591343 , 024-2222226 ஆகிய இலக்கங்களுக்கு

தொடர்பினை ஏற்படுத்தி வவுனியா போக்குவரத்து பொலிஸாரிக்கு தகவலை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews