மயங்கி வீழ்ந்த பல்கலை மாணவன் திடீர் மரணம்!

கஹதுட்டுவ-தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழக விடுதியில் மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவன் தனது அறையில் மயங்கி வீழ்ந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி ​​அவர் உயிரிழந்துள்ளார்.
தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் கட்டுகம்பளையைச் சேர்ந்த மலித் யசோதா என்ற 25 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
கட்டுபொத்த, பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த மாணவியின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews