
யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று முன்தினம் (02/01/2023) இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்ததிருந்த நிலையில் யாழ்போதானா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சிறு கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தரும் , வடமராட்சி கிழக்கு ஆழியவளையை சேர்ந்தவருமானான 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோகச்சந்திரன் பிரகலதன் நேற்று இரவு யாழ் போதனா வைத்திய சாலையில் மரணமடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணி பகுதியில் நேருக்கு நேர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறுப்பிட தக்கது