
இலங்கையில் தடை செய்யப்பட்ட சுமார் 6 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை தமிழக காவல்துறை நேற்று ராமநாதபுரத்தில் உள்ள வேதாளை கிராமத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் கைப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் ஏற்றப்பட்டிருந்தபோதே இந்த போதை மருந்துகள் வேதாளை கடற்பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டதாக கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது 6 இலட்சம் மாத்திரைகளை காவல்துறையினர். கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது. தப்பியோடிய கடத்தல்காரர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அத்துடன் கடத்தல் நடவடிக்கைகளை கண்டறிய கியூ பிரிவு காவல்துறையினர் கடலோர பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.