வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவர் கஞ்சாவுடன் கைது

கந்தளாய் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 350 கிராம் 250 மில்லி கிராம் கேரள கஞ்சாவை மறைத்து வைத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கந்தளாய் தள வைத்தியசாலையில் கடமையில் இருந்த போதே நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெதிரிகிரிய, பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews