மோதிரம் கழராததால் கத்தியால் விரலை வெட்டி மோதிரத்தினை கொள்ளையிட்ட பரபரப்பான சம்பவம்…..!

வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் மோதிரம் ஒன்றை கொள்ளையிட முடியாததின் காரணமாக அவரின் விரலை கத்தியால் வெட்டிவிட்டு மோதிரத்தினை கொள்ளையிட்ட பரபரப்பான சம்பவம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பசிட்டி பூவக்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பகுதியில் வசிக்கும் பழனியாண்டி என்பவர் தம்பசிட்டி பகுதியில் உள்ள சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த போது வீட்டில் அத்துமீறி உள்நுளைந்த மூவர் அவரின் கையில் இர்ந்த மூன்று மோதிரத்தை கொள்ளையிட்டதுடன் மற்றைய மோதிரம் களராததால் கைவிரலை வெட்டி மற்றைய மோதிரத்தையும் கொள்ளையிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews