அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியும், நடத்தக் கூடாது என்று கோரியும் உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 10ஆம் திகதியன்று உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதியன்று உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews