தாவடியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வானும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 7 மணியளவில் காங்கேசன்துறை வீதி, கொக்குவில் – தாவடி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், ஓட்டுமடத்தை அனோஜன் என்ற 19 வயது இளைஞனே யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அத்துடன், தாவடியை சேர்ந்த 17 வயதுடைய ரகுசன் என்பவர் யாழ். போதனா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். யாழ்ப்பாணம் பொலிஸார் விபத்துக் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews