
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் வீடு ஒன்றில் வங்கியில் பாதுகாவலராக கடமையாற்றிவரும் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
தம்பிலுவில் வீ.சி வீதியைச் சோந்த 2 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நாகமணி கணேசமூர்த்தி என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்
குறித்த நபர் கடமையை முடித்துவிட்டு வீடுவந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை அவரது அறையை திறந்துபொது அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்
பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெற்று வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.