
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் துறைமுகங்கள், விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.