
நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் பகுதியில் ஒன்பது பவுண் தங்க நகை களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
வீட்டின் உரிமையாளர் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துவில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் அவர் நேற்று காலை பணி நிமித்தமாக வெளியே சென்று இருந்தார். அவர் பணி முடிந்து நேற்றிரவு வீட்டுக்கு வந்து பார்த்த வேலை வீடு உடைத்து நகை களவாடப்பட்டு இருந்தவை தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இளவாவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை இளவாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.