யாழ்ப்பாணம் – வேம்படி வீதி முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் காரொன்று பலத்த சேதமடைந்துள்ளதுடன் காரில் பயணித்தவர் அதிஸ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
ஹைஏஸ் வாகனமொன்றும், காரொன்றும் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் யாருக்கும் பெரும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால், கார் – ஹைஏஸ் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.