ஊர்காவற்துறை நீதவான் நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு விஜயம்!

ஊர்காவற் துறை நீதவான் நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டுள்ளார்

கடற்படையின் விசேட படத்தின் மூலம் ஊர்காவற்துறை நீதவான் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் விசேட பொலிஸ் அணியும் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

குறித்த பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதோடுநெடுந்தீவுக்கான படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது இன்று அதிகாலை நெடுந்தீவில் கடற்கரை முகாமிற்கு அண்மையில் வீட்டில் தங்கி இருந்த ஐவர் வெட்டி கொலை செய்யப்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது குறித்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது,

Recommended For You

About the Author: Editor Elukainews