முடங்குகிறது வடக்கு கிழக்கு. இன்று பூரண கர்த்தால்…! பாடசாலைகள் இடம்பெறாது, போக்குவரத்தும் இல்லை, அனைத்து தர்ப்பும் ஆதரவு…!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களின் இன, மத, வாழிட அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய மாபெரும் ஹர்த்தால் ஒன்று இன்று 25ம் திகதி இடம்பெறுகிறது.

7 தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த இந்த ஹர்த்தால் அழைப்புக்கு வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், தனியார் போக்குவரத்து துறையினர், பல்கலைகழக மாணவர்கள், ஆசிரியர் சங்கங்கள் என சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்கள் முடக்கும் வகையில் இன்றைய  தினம் ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது. இதேவேளை கிழக்கில் தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் இந்த ஹர்தாலில் இணைந்து கொள்கின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews