தொடருந்தில் மோதுண்டு ஒருவர் படுகாயம்

கொழும்பு – திருகோணமலை பயணித்த தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (25.04.2023)இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முற்பட்ட போதே தொடருந்தில் மோதுண்டு குறித்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கந்தளாய் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய அமில பிரசாத் கருனாரத்ன என்பவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை தொடருந்தில் மோதுண்டதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews