
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிரதேச வீடு ஒன்றின், வாசலில் பொருத்தப்பட்டிருந்த படலை கழன்று வீழ்ந்ததில் மூன்று வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் கேப்பாப்புலவு பகுதியைச் சேர்ந்த ஆதவன் லிதுசிகன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த குழந்தை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, படலை கழன்று வீழ்ந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த குழந்தை முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.