மட்டு மயிலத்தமடு மேச்சல் தரையில் கன்று வயிற்றிலுள்ள பசுமாட்டை இறைச்சிக்காக அறுத்து செல்லப்பட்ட சம்பவம் காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களால் கால்நடைகளுக்கு அச்சுறுத்தல்

மட்டக்களப்பு பொலன்னறுறை எல்லைபகுதியிலுள்ள மயிலத்தமடு மாதவனை கால்நடை மேச்சல் பகுயில் மகாவலி கால் நிலையத்துக்கு அருகில் கன்று வயிற்றிலுள்ள பசு மாடு ஒன்றை இறைச்சிக்காக வெட்டி அறுக்கப்பட்டுள்ளதாகவும் கல்நடைகளை தொடர்ந்தும் திட்டமிட்டு அறுத்துவருவதாக கால்நடையாளர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இந்த மேச்சல் தரை பகுதி ஊடாக மாகாவலி திட்டம் செயற்பட்டுவருவதால் மேச்சல் தரை காணியை சிங்களவர்கள் அத்துமீறி அபகரித்துவரும் சர்ச்சை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் தொடர்ந்தும் அந்த பகுதிகளில் மேச்சல் தரையில் இருந்து கால்நடைகளை அகற்றுவதற்காக காணி அபகரிப்பில் ஈடுபட்டுவரும் சிங்களவர்கள் அங்கு மேச்சலில் ஈடுபட்டுவரும் மாடுகளை இறைச்சிக்காக  துப்பாக்கியால் சுட்டும் மற்றும் வெட்டி அறுத்து கொண்டு செல்லும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.

இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் காணாமல் போன பசுமாட்டை கால்நடை உரிமையாளர் தேடிச் சென்ற நிலையில் மகாவலி கால்நிலையத்துக்கு அருகில் கன்று வயிற்றிலுள்ள பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டி அறுத்துள்ள நிலையில் காணப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் இந்த கன்று வயிற்றிலுள்ள மாட்டை அறுக்கம் செயலானது மிகவும் ஒரு மோசமான செயலாகும் என கால்நடையாளர்கள் கடும் கண்டணம் தெரிவித்தனர்.

அதேவேளை தேசிய பால் உற்பத்தியில் அதிகமான பங்குகளை வழங்கிவரும் மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும் இருந்தபோதும் இந்த செயற்பாடானது கால்நடைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவே இந்த செயற்பாட்டில் ஈடுபட்வர்களை பொலிசார் கண்டுபிடித்து சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநா உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கால்நடையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews