அலுவலக பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு…!

OMP அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட OMP அலுவலகத்தினால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் நேற்று 08/07/2023 மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் T. ஜோகராஜா, கிளிநொச்சி பிராந்திய இணைப்பாளர் நிசாந்தன் ஜீட் பீரிஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டனர். இதன்போது, போராடுவதற்கான உரிமை உள்ளதகவும், பாதிவுக்காக வருகை தருபவர்களிற்கு இடையூறு இல்லாமல் செயற்படுமாறும் ஆணையாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews