அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு படகுகளில் வந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளையும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews