மன்னம்பிட்டிய பேருந்து விபத்து : அறிக்கை சமர்ப்பிக்க கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்பு

பொலன்னறுவை – கதுருவெல மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews