பாரிய கூட்டணியில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாரிய கூட்டணியில் போட்டியிடுவார். இந்த கூட்டணி சிறிலங்கா சுதந்திர கட்சி, பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளில் இருந்தவர்களால் உருவாக்கப்படும். ஜனாதிபதி விக்ரமசிங்க இந்த கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews