
19 வயது பிரிவிற்குட்பட்ட தேசிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு, நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் சுழிபுரம் பாண்டவெட்டை காட்டுபுலம் இணைந்த கரங்கள் அமைப்பின் தலைவர் திரு இராசேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.


தொடர்ச்சியாக பாண்டவெட்டை காட்டுபுலம் கிராமத்தில் க.பொ.த சாதாரண தர சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் புலமைபரிசில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்பொழுது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் , சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அதிபர் சத்தியகுமாரி சிவகுமார் , கிராமசேவையாளர்கள் , அலைபாடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசகர் அருள் சிவானந்தன், நாங்கள் செயற்பாடு அமைப்பின் தலைவர் எஸ்.பிரதாப் , மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
