காங்கேசன்துறையில் 54 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

காங்கேசன்துறை கடற்பரப்பில் 54கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை கடற்படையினர் நேற்று அதிகாலை (06) 3 மணியளவில் கைதுசெய்து காங்கேசன்துறை குற்றதடுப்பு பொலிசாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய கடற்படையினரால் குறித்த கைது, முன்னெடுக்கப்பட்ட நிலையில் படகுடன் 54 கிலோகிராம் கஞ்சாவினையும் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியினை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.
இதேவேளை இரு இளைஞர்கள் ஜி.பி.எஸ் உபகரணங்களுடன் தப்பி சென்ற நிலையில்  காங்கேசன்துறை குற்றதடுப்பு பொலிசாரிடம் சான்று பொருட்கள் ஒப்படைக்கப்பட்டட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews