யாழில் கோர விபத்து : கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம், ஏ9 வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இன்று பகல் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதியில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புவனேஸ்வரன் மனேஜ் (31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews