மட்டக்களப்பில் 78 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய முதியவரான பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டு கருவப்பங்கேணி அம்பிறோஸ் வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய நடராசா கண்மணியம்மா கடந்த யூன் 24 ம் திகதி (6-24-2023) வீட்டில் இருந்து வெளியேறிய நிலையல் காணாமல் போயு;ள்ளர் இவரை உறவினர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தேடிவந்தபோதும் இவரை கண்டுபிடிக்கமுடியவில்லை எனவே இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக இலக்கம் 065-2224422 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews