தியாக தீபத்தின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு பல்கலை மாணவர்களால் இரத்த தானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனை நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக மாணவர் கட்டத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது வெகுவான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கி தியாக தீபம் திலீபனை நினைவில் நிறுத்தினர்.
குருதிக்கொடையின் இரண்டாவது அங்கம் எதிர்வரும் 26.09.2023 (செவ்வாய்க்கிழமை) யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews