மன்னாரில் இன்று 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை!

மன்னார் மாவட்டத்தில் இன்று சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, மன்னார், முருங்கன் நகர், பள்ளிமுனை, எழுத்தூர், வங்காலை, அடம்பன் ஆகிய பிரதேசங்களிலும், அவற்றை அண்மித்த பிரதேசங்களிலும் தோட்டவெளி, சிறுத்தோப்பு, எருக்கலம்பிட்டி, திருக்கேதீஸ்வரம், நாகதாழ்வு உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews