தியாகதீபம் அவர்களுடைய நினைவு நாளை தடை செய்யக்கோரி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு…..!

தியாக தீபம் திலீபன் அவர்களுடைய நினைவு நாள் நிகழ்வுகளை தடை செய்யக் கோரி  பருத்தித்துறை போலீசார் தாக்கல் செய்த மனுவை பருத்தித்துறை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தியாக திலீபன் நினைவு நிகழ்வுகள் ஊர்திப் பாவனைகள் நடத்துவதன் மூலம் வன்முறைகள் உருவாகும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு பருத்தித்துறை  போலீசார் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை  கைது செய்ய போலீசாருக்கு அதிகாரம் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி அமைதியான நிகழ்வுகளை தடுக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews