நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள்.படுகொலையின் 28ம் ஆண்டு நினைவு நாள்….!

22.09.1995 அன்று வடமராட்சிகிழக்கையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய நாள் வடமராட்சிகிழக்கில் நாகர்கோவில் மண்ணில் இடம்பெற்றது.

மாணவர் இனப்படுகொலையை இலங்கை விமானப்படையின் புக்காரவிமானங்கள் அரங்கேற்றியது.

அன்றைய நாட்களில் வடமராட்சிகிழக்கில் அதிகளவான மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J/425. J/424 J/423 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.

கிட்டத்தட்ட 3000க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் அங்கிருந்தனர்.

1990 காலப்பகுதியில் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட மக்களும் வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவு, தட்டுவன்கொட்டி கிராம மக்களும் யாழ்ப்பாணத்தின் வலிவடக்கு மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி வசாவிளான், வளலாய், போன்ற பகுதிகளில் இருந்து இடம்பெயந்தமக்களும்,  1990தீவகத்தை ராணுவம் ஆக்கிரமித்தபோது அங்கிருந்த தப்பி வந்தமக்களும், 1991.07.14 காலப்பகுதியில் ஆனையிறவை மீட்ப்பதற்க்காக புலிகள் தொடுத்தபோரின் போது சிக்கிய படைகளை மீட்க்க வடமராட்சிகிழக்கின் வெற்றிலைக்கேணியில் ராணுவம் கடல் மூலம் தரையிறங்கியபோது வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, வத்திராயன், மருதங்கேணி, போன்ற கிராமசேவகர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களும் 1992ல் மாதகல் இளவாலை, பண்டத்தரிப்பு, சுழிபுரம், பொன்னாலை, மூளாய், சேந்தாங்குளம், பகுதிகளைசேர்ந்த மக்களும் குறிப்பாக கடல்த்தொழிலை தமது வாழ்வாதரமாய் கொண்டமக்கள் அங்கு குடியேறியிருந்தார்கள்.  இந்த மக்களுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முகாம்களை அமைத்துக் கொடுத்திருந்தது.
முகாம்களான 1.மட்டக்களப்பு முகாம்
2.திருகோணமலை முகாம்
3.ஆனையிறவுமுகாம்
4.தட்டுவன்கொட்டிமுகாம்
5பலாலிமுகாம்
6.காங்கேசன்துறைமுகாம்
7.வெற்றிலைக்கேணிமுகாம்
8.ஆழியவளைமுகாம்
9.மாதகல் முகாம்
10.இளவாலைமுகாம்
இருந்து வந்தது.

இங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை கற்பிக்கும் பாடசாலைகளாக நாகர்கோவில் மாகாவித்தியாலயமும், நாகர்கோவில் தெற்க்கு ஆரம்ப பாடசாலையுமே இருந்து வந்தது.

நாகர்கோவில் ம.வியில் கிட்டத்தட்ட. 2500 க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கல்விகற்றார்கள். அந்த நாட்களில் நாகர்கோவில் கிராமம் ஒரு நகரம்போல்த்தான் இருந்தது. சன நேரிசல் நிறைந்து இருந்தது சந்தை ஒன்றும் இயங்கியது அத்துடன் இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒவ்வொருகிழமையும் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணத்தை வடமராட்சிகிழக்கு ப.நோ.கூ.சங்கம்.வழங்கிவந்தது 3கிளைகள் ஊடாக.

20.09.1995.அன்று முல்லைத்திவு. செம்மலைக்கடல்பரப்பில் விடுதலைப்புலிகளின் கடல் புலிகளுக்கும்,  கடல்படைக்கும் நடந்த சண்டையில் கடல்புலிகள் கடற்படையின் ஐரிஸ்மோனா. எனும் படைகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் கப்பலை கைப்பற்றியிருந்தார்கள்.

அந்தக்கப்பலை கொண்டுவந்து வடமராட்சிகிழக்கில் தமது தளம் அமைந்திருந்த நாகர்கோவிலுக்கு கிழக்குப்பகுதியில் 3Km தொலைவில் உள்ள குடாரப்பு கடலில்  நங்குரமிட்டிருந்தார்கள்.

அந்த கப்பலை இலக்குவைத்து புக்கார விமானங்கள் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடித்திய விமானங்கள் மீது புலிகள் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். அதனால் இலக்கை அடையமுடியாத புக்காரவிமானம்கள் இரண்டும் நாகர்கோவில் கிராமத்தையும் சுற்றிவட்டமிட்டது.

அந்த வேளையில் அங்கு தியாகி திலீபனின் 8ம் ஆண்டின் 8ம் நாள் நிகழ்வும் உண்ணநோன்பும் நாகர்கோவிலில் இடம்பெற்றுக்கொண்டிருந்து. அப்போது புக்கார வட்டமிட்டபோது சந்தைக்கு வந்தமக்கள், நிவாரணம் பெறவந்தமக்கள் ,திலீபனின் உண்ணநோன்பில் கலந்து கொண்டிருந்த மக்கள் ,எல்லாரும் பாதுகாப்புதேடி ஓடினர்.

புக்கார தாழப்பறந்து வட்டமடித்தபோது பாடசாலை மாணவர்களும்.சிதறி ஓடினர். ஓடியமாணவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவு மாணவர்கள்.அயலில் உள்ள பெரிய புளியமரத்தின் கீழ் பாதுகாப்புத்தேடிக்கொண்டனர்.

அப்போது அடுத்து அடுத்து இரண்டு புக்காரவிமானங்களும் ஆறுக்குமேற்பட்ட குண்டுகளை பாடசாலையை சுற்றிவீசியது. இரண்டுகுண்டுகள் அந்தப்புளிய மரத்தின்மீது விழுந்து வெடித்தது. சம்பவ இடத்திலே.21 மாணவர்கள் பலியானர்கள். 35க்கு மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர் மாணவர்களின் வெள்ளை சீருடைகள் செங்குருதியினால் சிவப்பு சீருடைகளாக்கப்பட்டது.  5பொதுமக்களும்பலியாகினர்.

இந்த சம்பவத்தில் மயிலிட்டியைச்சேர்ந்த ஒருமாணவி இரண்டுகால்களையும் இழந்தார். அவர் இதன்சாட்சியாக இன்றும் இருக்கிறார். (புலம்பெயர் நாட்டில்) காயமடைந்த மாணவர்கள் விடுதலைப்புலிகளின் அன்பு மருத்துவமனையாலும்.பொதுமக்கள் ICRC,  தமிழர் புனர்வாழ்வுக்கழகம், கடல்புலிகள் பொதுமக்கள் அனைவருமாக இணைந்து காயப்பட்டவர்களை அம்பன் வைத்தியசாலைக்கும், அதன் பின்.மந்திகை வைத்தியசாலைக்கும் .கொண்டுசென்று அவர்களுக்கு வைத்தியசேவைகளை வழங்கியது.

ஐரிஸ்மோனவின் இழப்புக்கு தனது பழியை தீர்த்து அப்பாவி மாணவர்களை கொண்றது இலங்கை விமானப்படையின் புக்கார விமானங்கள்.

 

அதன்சாட்சியாக இன்றும் பலர்.இருக்கினம் சிலர் சுனாமியிலும்.இறுதியுத்தத்திலும் கொல்லப்பட்டாலும் பலர் பல இடங்களிலும் இருக்கிறார்கள். அன்று மாணவியாக கடுமையாக காயமடைந்த ஒரு மாணவி இன்று ஒரு ஆசிரிகையாக மருதங்கேணி கோட்டத்தில் உள்ள பாடசாலையில் கல்விகற்ப்பிக்கின்றார். இந்த இனப்படுகொலையை.என்றைக்கும் மறக்கமாட்டார்கள் மக்களும் மண்ணும்

கொல்லப்பட்ட மாணவர்கள்

கண்ணீருடன் கசியும் இதயத்துடன் ….

செல்வன் மயில்வாகனம் கணகநாதன்

செல்வன் இராமநாதன் கோபிதரன்

செல்வன் சுந்தரலிங்கம் பழனி

செல்வன் நாகமுத்து செந்தில்வேல்

செல்வன் கிருஷ்ணகுமார் தவசீலன்

செல்வன் இராசரத்தினம் உமாகாந்தன்

செல்வி அல்போன்ஸ் அமலவிஜி

செல்வி இரவிந்திரராசா அமிர்தா

செல்வி இராசரத்தினம் கவிதா

செல்வி இராமநாதன் மேதினி

செல்வி மார்க்கண்டு நாகலோஜினி

செல்வி பாலச்சந்திரன் ரஜிதா

செல்வி தாமோதரம் சகுந்தலா

செல்வி இராமச்சந்திரன் சங்கீதா

செல்வி சிதம்பரப்பிள்ளை சசிருபி

செல்வி செல்வகுலசிங்கம் செல்வதி

செல்வி குகசரவணமலை தர்சினி

செல்வி சுந்தரலிங்கம் தர்சினி

செல்வி பூலோகராசா துஷாந்தினி

செல்வி நவரத்தினசாமி உமாதேவி

செல்வி தர்மலிங்கம் துஷந்தினி

Recommended For You

About the Author: Editor Elukainews