
தவறான முடிவெடுத்து மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
குறித்த மாணவன் நேற்று முன்தினம் (07) கோயிலுக்கு போய்விட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் மாணவனுக்கும் தந்தைக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நித்திரைக்கு சென்றனர்.
அதன்பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு பெற்றோர், மகனை தேடியவேளை மகனை காணவில்லை. பின்பு வீட்டின் பின்புறம் இருந்த மரம் ஒன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயமா பிறேம்குமார் மேற்கொண்டார்.