யாழ் நகரில் கேக் வெட்டிய கும்பலை கைது செய்யும் பணி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம்ஒப்படைப்பு!டிஐஜி,

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் மக்களை அச்சுறுத்தி கேக் வெட்டி கொண்டாடிய வன்முறை கும்பலை கைது செய்யும் பணியினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்

கடந்த வியாழக்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஐவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்கள் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்த இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

அத்தோடு குறித்த இளைஞர்கள் வீதிகளில் கலைக்கவசம் இல்லாது பயணித்தபோது குறித்த பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாரையும் விசாரணைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகவும்தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews