
சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் சப்புகஸ்கந்த – மாகொல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த தேடுதலின் போது குறித்த பெண் கைதானார்.
கைதான பெண்ணிடம் இருந்து ஒரு கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும், 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.