ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.

 ஹெலிகொப்டர் வெல்லவாய புதுருவகல பாடசாலை மைதானத்தில் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வெலிமடைக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் வேறு ஒரு வாகனம் வரும் வரை காத்திருந்து ஜனாதிபதி பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews