
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார் மற்றும் வே.பிரசாந்தன் ஆகியோர் சுடரேற்றியும், அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தியும் நினைவு கூர்ந்தனர்.



