பொலிஸ்மா அதிபர் – மக்கள் சந்திப்பு தினம் மீண்டும் ஆரம்பம்!

கொவிட்- 19 வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த காவல்துறைமா அதிபரின் மக்கள் சந்திப்பு தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 9 மணி முதல் காவல்துறைமா அதிபரின் மக்கள் சந்திப்பு இடம்பெறும் என அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.
பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தல்களுக்கமைய, இந்த மக்கள் சந்திப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
காவல் நிலையங்கள் மற்றும் விசாரணை பிரிவுகளுக்கு தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் அளிக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் கிடைக்காவிடின் அல்லது காலதாமதம் ஏற்படுமாயின் அது குறித்து இதன்போது முறையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews