
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரென தெரியவந்துள்ளது.
போலியான கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக கனடாவில் வசிக்கும், குறித்த இளைஞரின் உறவினர் ஒருவர் இலங்கையிலுள்ள தரகர் ஒருவருக்கு 40 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.