முட்டை இறக்குமதி தொடர்பான முக்கிய செய்தி!

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை, முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரச வணிகக் கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

சந்தையில், முட்டையின் விலை சடுதியாக உயர்வடைந்ததன் காரணமாக, உணவுக் கொள்கைக்கான குழு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, தொடர்ச்சியாக முட்டைகளை இறக்குமதி செய்து, உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கவுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் திங்கட்கிழமை, சதொச, வெதுப்பகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு, 10 மில்லியன் முட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என அரச வணிகக் கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews