கிராஞ்சி, வேரவில் உள்ளிட்ட பிரதேசங்களிற்கான போக்குவரத்து பாதிப்பு – மன்னார் யாழ் வீதியையும் குறுக்கறுத்து பாயும் வெள்ளம்

கிராஞ்சி, வேரவில் உள்ளிட்ட பிரதேசங்களிற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் யாழ் வீதியையும் குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்து வருகிறது.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள சுமார் 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல்லவராயன் கட்டுகுளத்தின் கட்டு பகுதி ஊடாக உடைப்பெடுத்து நீர் வெளியேறி வருகிறது. இதனால் குறித்த வெள்ள நீர் மன்னார் யாழ்ப்பாணம் வீதி ஊடாக ஊடறுத்து செல்வடன், குறித்த வீதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்ட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலை சேவை உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews