பெற்றோருக்கான பேரிடி-அதிர்ச்சிக்குள்ளாகும் அறிவிப்பு

பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரிக்கப்படும் சதவீதம் குறித்து பாடசாலை ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக லலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (01) முதல் புதிய வற் வரி திருத்தம் அமுல்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews