அதிகரித்தது மற்றுமொரு வரி

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கலால் வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உரிமம் பெற்ற தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் விஷேட மதுபானத்திற்குமான 6,000 ரூபா கலால் வரி 6,840 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் வெளிநாட்டு மதுபானத்தின் மீதும் 6,600 ரூபாவாக இருந்த வரி 7,320 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்புடன், சிகரெட்டின் விலையும் இன்று முதல் 3 பிரிவுகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிகரட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆங்கில புத்தாண்டில் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது இலங்கை அரசாங்கம்

Recommended For You

About the Author: Editor Elukainews