நித்தியவெட்டையில் பரபரப்பு -இளைஞனின் சடலம் மீட்பு

நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பில் சந்தேகிக்கப்படும் நிலையில் பொலிஸ் விசாரணைக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

வடமராட்சி நித்தியவெட்டை பகுதியை சேர்ந்த 25வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு உடன் வருகை தந்து முள்ளியான் கிராமசேவகர் கி.சுபகுமார் சடலத்தை பார்வையிட்டுள்ளார்

இளைஞனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள உறவினர்கள் மருதங்கேணி பொலிசில் முறைப்பாடு அளிப்பதற்காக சென்றுள்ளனர்

பொலிஸ் விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் வெளிப்படும்.

Recommended For You

About the Author: Editor Elukainews