பேருந்து கட்டணமும் உயர்கிறதா?

போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

குறித்த சட்டத்தை மாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

புகையிரத, முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் உட்பட அனைத்தும் இதற்குள் உள்வாங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் நியாயமான விலைக் கொள்கையை அங்கு உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews