ரணில் யாழ் வருகை-எட்டு பேருக்கு தடை உத்தரவு?

ஜனாதிபதி யாழ் வருகை போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என கருதி 8 பேருக்கு தடை உத்தரவு கேட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்த வாய்ப்பிருப்பதாக கிடைத்த புலனாய்வு தகவல்களை மேற்கொள் காட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews