சங்கீத ஆசிரியை துஷ்பிரயோம்-பொலிசாரால் ஒருவர் கைது

சங்கீத ஆசிரியரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, ஹட்ட விஜயராம மாவத்தையில் 75 வயதான சங்கீத ஆசிரியை ஒருவரை வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் திருடிச் சென்ற கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி, இரண்டு எரிவாயு உருளைகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews