வடமராட்சி கிழக்கில் மணலுடன் தடம்புரண்ட டிப்பர்-சம்பவ இடத்தில் பொலிசார்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி 1ம் கட்டை குறுக்கு வீதி வடலியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் டிப்பர் ஒன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.

மணல் ஏற்றிக் கொண்டுவந்த வேளையே குறித்த டிப்பர் பாதையை விட்டு விலகி தடம் புரண்டுள்ளது.

சம்பவ இடத்தை மருதங்கேணி பொலிசார் பார்வையிடுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அனுமதி பத்திரத்துடன்தான் மணல் ஏற்றப்பட்டதா என்பது தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியதோடு குறித்த இடத்தில் பலர் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்க போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews