வவுனியாவில் காதல் ஜோடி செய்த மிக மோசமான செயல்

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு தங்கியிருந்த காதல் ஜோடியிடம் கஞ்சாவும், தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் காதலர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பொலிஸார் பெறவுள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews