200 கிலோகிராம் போதைப்பொருளுடன் அறுவர் கைது

காலி கடற்பகுதியிலிருந்து சற்று தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து பல நாள் மீன்பிடி படகு, போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 200 கிலோ கிராம் நிறையைக்கொண்ட இந்த போதைப்பொருள் 278 பொதிகளாக பொதியிடப்பட்டு நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.

படகில் சென்றிருக்கும் சந்தேகநபர்கள், சுமார் 300 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்திவருவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன ​என கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலும், போதைப்பொருளுடன் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews