கோர விபத்து-மாணவி பலி

நீர்கொழும்பு பிரதேசத்தில் கனரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 13 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (4) இடம்பெற்றுள்ளது.

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவியின் தாய் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews