பருத்தித்துறையில் பரபரப்பு-திடீர் சோதனை

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்தித்துறை பகுதியில் பொலிசாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த தலைமையில் குறித்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று இரவு 07.30 இருந்து 08.30 மணிவரை மோப்ப நாயின் உதவியுடன் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.

கொழும்பு நோக்கி செல்ல தயாராக இருந்த பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டன.

இந்த திடீர் நடவடிக்கையில் பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சரும் இணைந்து கொண்டதோடு அதிரடிப்படையினரும் வருகை தந்து சோதனையில் ஈடுபட்டனர்

இந்த சோதனை நடவடிக்கையில் எந்தவிதமான போதை பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews