இன்று ஒன்பது மாவட்டங்களில் சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு

நாடளாவிய ரீதியல் இன்று ஒன்பது மாவட்டங்களில் சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு யாழ்ப்பாணம் மாநகரசபை யூபிலி சுகாதார மகப்பேற்று நிலையத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு காலை 9:00மணிக்கு ஆரம்பமானது.
இதல் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.ஆறுமுகம் கேதீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
இச் செயற்பாடு யாழில் அனைத்து சுகாதார ணேவைகள் நிலையத்திலும் மாலை நான்கு மணி வரை இடம்பெறவுள்ளது, எனவே ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரையான வயதினையுடைய குழந்தைகளை அருகில் உள்ள  சுகாதார சேவைகள் திணைக்கள நிலையத்திற்கு கொண்டு சென்று தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு
வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews